மதுரை: ஓட்டுக்கு பணம் வாங்கத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2016, மார்ச் மாதம் நெல்லையில் தேமுதிக சார்பில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டேன். அப்போது, ஓட்டுக்கு பணம் வாங்கும்போது, ஒரு ஓட்டுக்கு குறைந்தது ரூ.1 லட்சமாவது வாங்க வேண்டுமென வாக்காளர்களை பணத்தை வாங்கத் தூண்டும் வகையில் நான் பேசியதாக தாசில்தார் புகார் அளித்துள்ளார்.