காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி கலங்கல் வழியாக உபரிநீர் வெளியேறுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வேகவதி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஆற்றின் கரையோரம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால், காஞ்சிபுரம் மாநகராட்சி 36வது வட்டம் தாயார் அம்மன் குளம் தெரு, பிள்ளையார்பாளையம் உள்பட பல பகுதிகளில் கரையோரம் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதையறிந்ததும், காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், தண்ணீர் சூழ்ந்த பகுதிக்கு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.