விராலிமலை: விராலிமலை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கால்நடைகள் தொடர்ந்து இறந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த தொடர்மழைக்கு கல்குடி ஊராட்சி தாளப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னக்கண்ணுக்கு சொந்தமான 9 செம்மறி ஆடுகள் அதிகாலை இறந்தது.