காஞ்சிபுரம்: தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (32). தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடந்த சிலஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணபிரசாத்துக்கும் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் அர்ச்சனா (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது. வரதட்சணை தகராறில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை சார்பில் இளநிலை உதவியாளர் பிரேமா மார்க் என்பவரிடம் பரிந்துரைக் கடிதம் கோரியுள்ளார்.