நடப்பு ஆண்டில் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தொடர்ந்து 4வது முறையாக தமிழகம் தேர்வு!!

சென்னை : நடப்பு ஆண்டில் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் மாநிலமாக தொடர்ந்து 4வது முறையாக தமிழ்நாட்டை தேர்வு செய்துள்ளது இந்தியா டுடே நிறுவனம். ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில், கடந்த காலத்தை விட முன்னேறிய மாநிலப் பட்டியலில் பீகாருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலமாக தெலுங்கானா அறிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் வேளாண் வளர்ச்சியில் பஞ்சாப் மாநிலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்தில் முதலிடம் கேரளாவுக்கு கிடைத்துள்ளது. கல்வியில் முதலிடம் இமாச்சல் பிரதேசம் மாநிலத்திற்கு கிடைத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு பேணிக்காப்பதில் குஜராத் மாநிலம இந்திய அளவில் முதன்மையான இடத்தில் இருக்கிறது. நிர்வாக ரீதியான செயல்பாடுகளில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஒருங்கிணைத்த வளர்ச்சியில் ஆந்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

அதிக தொழில் முனைவோர் உருவாகும் மாநிலமாக ஹரியானா முதலிடத்தில் உள்ளது.

சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பதில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. சுத்தமாக உள்ள மாநிலத்தில் பஞ்சாபிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories: