சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022 நடைபெறுவதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் 27ம் தேதி சனிக்கிழமை மற்றும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் மண்டலங்கள் 4, 5, 6, 8, 9, 10 மற்றும் 13க்குட்பட்ட சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளன.