சென்னை: நடிகை அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்குசைதாபேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார்.