உலக கழிப்பறை தினம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உலக கழிப்பறை தின விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், ஊராட்சி செயலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, அனைவரும் ‘முழு சுகாதார தமிழகம் முன்னோடி தமிழகம்’ என உறுதி மொழியை அனைவரும் ஏற்று கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானப்பிரகாசம் பேசுகையில், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து அனைத்து ஊராட்சி பொதுமக்களிடமும் நீங்கள் விரிவாக எடுத்துரைக்க வேண்டும். சுகாதாரத்தை கட்டிக் காப்பதில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: