போக்சோவில் வாலிபர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டையை சேர்ந்தவர் சாய். இவரது மகள் பிரியா (17). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்த பிரியா திடீரென மாயமானார். அவரை, பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதையடுத்து சாய், ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், காட்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி (19) என்பவர், சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து, அவரது செல்போன் சிக்னலை வைத்து நேற்று முன்தினம் சென்னையில் சிறுமியை மீட்டனர். விசாரணையில், திருமணம் செய்வதாக கூறி, சிறுமியை கடத்தியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: