முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவு தினம்!: திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

திருச்சி: முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவுதினத்தை ஒட்டி அவரது உருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். திமுக முன்னோடிகளில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் 18ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அரசியலில் நாகரீகம், பொதுவாழ்வில் தூய்மை, உயர்ந்த கொள்கை, தொலைநோக்கு பார்வை என உலக அரங்கில் இந்தியாவை உயர்த்திய முரசொலி மாறனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. விழுப்புரத்தில் மத்திய மாவட்ட திமுக சார்பில் திமுக அலுவலகத்தில் முரசொலி மாறன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினர்.

வேலூரில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முரசொலி மாறன் நினைவு தினத்தை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு திமுகவினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல் கடலூர், புதுகோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் முரசொலி மாறனின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Related Stories: