சென்னை: சென்னை நகரில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120 முதல் 150 வரை விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திராவில் மழை பெய்து வருவதால் அங்கிருந்து தக்காளி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. மழை காலத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.