சென்னை: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மாவட்ட அளவில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் வரும் 3ம்தேதி வரை நடைபெறுகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு டீசலுக்கு ரூ.10ம், பெட்ரோலுக்கு ரூ.5ம் குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது. எனவே தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை மற்றும் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க கோரியும் தமிழக பாஜ சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற உள்ளது.