டெல்லி: இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு, நாட்டின் உயரிய விருதான வீர் சக்ரா விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவுரவித்திருக்கிறார். பாதுகாப்பு துறை சார்ந்த விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் பல்வேறு தரப்பினருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இந்திய விமானப்படை குரூப் கேப்டன் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்துள்ளார். அபிநந்தன் விங் கமாண்டராக இருந்த போது புரிந்த வீரதீர செயலுக்காகவே இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.