சென்னை: வேளாண் சட்டங்களை ரத்து செய்தது போன்று நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வலியுறுத்தினார். சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 500 பேருக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் நிவாரண உதவிகளை மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் வழங்கினார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தல்களில் தோல்வி அடைவோம் என்ற அச்சத்தில் தான் வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு ரத்து செய்துள்ளது. இந்த சட்டங்களை ரத்து செய்தது போன்று நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். அதை ரத்து செய்தால் ஒன்றிய அரசை தமிழக மக்கள் மனதார பாராட்டுவார்கள்.