டெல்லி : ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தை நடத்தாமல் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்படும் என பிரதமர் மோடி கூறியது ஏன் என்று ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு அவரது அரசியல் திறனை காட்டுவதாக உள்துறை அமைச்சரும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுத்ததாக பாதுகாப்பு அமைச்சர் கூறியதை சுட்டிக் காட்டியுள்ளார்.