ஆவடி:ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததாக பாமகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பாமக மாநில துணை பொதுச்செயலாளர் சேகர் தலைமை வகித்தார். பின்னர் ஆவடி போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் இதுகுறித்து பாமகவினர் புகாரளித்தனர். அதில், ஜெய்பீம் படத்தில் வன்னிய சமுதாய மக்களை கொச்சைப்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளாதாகவும் இரு சமூகத்திற்கும் பதற்றத்தை உருவாக்கி இருப்பதாகவும் எனவே நடிகர் சூர்யாவை கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.