டெல்லி : மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை தாம் வரவேற்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று காலை உரையாற்றினார்.அப்போது, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை இன்று முதல் வாபஸ் பெறப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகளும் திரும்பப் பெற வேண்டும் என்றும் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து பேசிய அவர், வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை. வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு.வேளாண் சட்ட விவகாரத்தில் நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்.வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும்.குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லுநர்கள் இடம்பெறுவர்.விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம், என்றார்.