சென்னை: தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் இரு அமர்வுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பக் கோரியும், மூன்றாவது அமர்வை அமைக்க கோரியும் சென்னையை சேர்ந்த வெங்கட சிவகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.