சென்னை: வேலூர் உள்ளூர் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய முன்னேற்ற கழக தலைவர் சிவக்குமார் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை பாதுகாத்தார். தற்போது, பருவமழையில் இருந்து தமிழக மக்களை காப்பாற்றி இருக்கிறார். அனைத்து தரப்பு மக்களும் போற்றப்படும் நல்லாட்சியை திமுக அரசு தந்து கொண்டிருக்கிறது.