பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகர போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பெங்களூரு பஸ் நிலையத்தில் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து இரு பைகளில் வைத்திருந்த 401 இந்திய நட்சத்திர ஆமைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக விற்க முயன்ற தமிழகத்தை சேர்ந்த ஹமாத் மீரா (51) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக விற்க முயன்ற நபர் மீது 1972ம் ஆண்டு வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து மொத்தம் 401 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.