சென்னை: பிரபல எழுத்தாளரும், நடிகருமான பாரதி மணி (84), வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். நாகர்கோவில் பார்வதிபுரத்தில் பிறந்த பாரதி மணி என்கிற கே.கே.எஸ்.மணி, சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘பாரதி’யில், பாரதியாரின் தந்தை வேடத்தில் நடித்ததால் ‘பாரதி’ மணி என்று அழைக்கப்பட்டார். இளமைக்காலங்களில் நாடகங்களில் நடித்து வந்த அவர், பிறகு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.