புதுடெல்லி: ஓரினச்சேர்க்கையாளரும் மூத்த வழக்கறிஞருமான சவுரப் கிருபாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு நவ.11ம் தேதி நடத்திய கூட்டத்தில் மூத்த வழக்கறிஞரும் ஓரினச்சேர்க்கையாளருமான சவுரப் கிருபாலை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்துள்ளது.