சென்னை: தற்காலிக பணிநீக்க உத்தரவை எதிர்த்து சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். ராஜேஷ்தாஸ் மனுவுக்கு தமிழ்நாடு அரசு 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ். முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்புச் சட்டப்படி ராஜேஷ்தாஸ் மீது விசாரணை நடைபெற்றது.