உகாண்டாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பால் பதற்றம்: இந்திய வீரர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக பயிற்சியாளர் தகவல்

கம்பாலா: உகாண்டா நாட்டு தலைநகர் கம்பாலாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ஏற்பட்டது. கம்பாலாவில் நாடாளுமன்றம் மற்றும் காவல்நிலையம் அருகே அடுத்தடுத்து குண்டு வெடித்ததுள்ளது. சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொள்ள அங்கு சென்றிருந்த தமிழ்நாட்டு வீரர்கள் அடங்கிய இந்திய அணி தங்கியிருந்த ஹோட்டல் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது. தமிழக வீரர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் குண்டு வெடித்துள்ளது.

இரு சக்கரவாகனத்தில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதிகள் 3 பேர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 பேர் உள்ளிட்ட இந்திய பாரா பேட்மிண்டன் அணியினருக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்திய வீரர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக பயிற்சியாளர் பத்ரிநாத் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: