கொடநாடு வழக்கில் கைதான ரமேசுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா மாஜி கார் டிரைவர் ஆத்தூர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார். இதனையடுத்து கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். பின்னர் சாட்சியங்களை கலைத்தது, தடயங்களை அழித்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ரமேசிற்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் முதலில் கூடலூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Related Stories: