வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி(102). இவர்கள் ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தேவதத்தை, சுசீலா, நாகரத்தினம், கஸ்தூரிபாய், சாந்தா, கவுரி ஆகிய 6 மகள்கள் உள்ளனர். மேலும், பொன்னுசாமி கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து செய்யாறு தாலுகா வேலியநல்லூர் கிராமத்தில் உள்ள இளையமகள் சுசீலா வீட்டில் கடந்த 43 ஆண்டுகளாக விஜயலட்சுமி வசித்து வந்தார். பின்னர் கடந்த 7 ஆண்டுகளாக எறும்பூர் கிராமத்தில் உள்ள மற்றொரு மகள் நாகரத்தினம் வீட்டில் தங்கியிருந்தார். வயது முதிர்ந்தாலும் கண்ணாடி அணியாமலேயே படிக்கும் திறன் கொண்டவராக இவர் இருந்தார்.