சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தில் வடியாத வெள்ளநீரில் மக்கள் தவிப்பு Nov 14, 2021 செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலைகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் இன்னும் வடியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக, காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரெட்டிபாளையம், குருவன்மேடு இடையே தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, இப்பகுதி மக்கள் பல கிமீ தூரம் சுற்றி வந்து அவதிப்படுகின்றனர். திம்மாவரம், மகாலட்சுமி நகரில் இஞ்சிமேடு அணைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீஞ்சல்மடுவின் கரை பகுதிகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மகாலட்சுமி நகர், பாலாறு நகர், வைபவ் நகர் ஆகிய இடங்களில் 10 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் இருந்து பாலூர் வழியாக செல்லும் சாலையில் வெங்கடாபுரம் அருகே சாலையின் குறுக்கே மழைநீர் செல்வதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியேற முடியாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். மேலமையூர் ரயில்வே சுரங்கபாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், பல கிமீ சுற்றிக்கொண்டும், ஆபத்தான முறையில் பொதுமக்கள் தண்ணீரில் நடந்து செல்கின்றனர். கொளவாய் ஏரியை ஒட்டியுள்ள ராமகிருஷ்ணா நகர், பவானி நகர், வல்லம், நியூ காலனி பகுதிகளில் 2 ஆயிரம் வீடுகளை கடந்த 5 நாட்களாக வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை உள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில் அனுமந்த புத்தேரி, அண்ணாநகர், ஜேசிகே நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த வெள்ள நீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்
சித்திரை மாத பிரமோற்சவ விழா திருநீர்மலை ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்: வடம் பிடித்து பக்தர்கள் தேர் இழுத்தனர்
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நாளை நிறுத்தம்: குடிநீர் வாரியம் தகவல்
சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றுவோர் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்
தெற்கு – வடக்கு உஸ்மான் சாலையில் மேம்பால பணி காரணமாக தி.நகர் மேட்லி சந்திப்பில் இன்று முதல் ஓராண்டு வரை போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு
மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து வந்து வயிறு வலிப்பதாக நாடகமாடி காதலனுடன் சிறுமி எஸ்கேப்: கூல் டிரிங்க்ஸ் வாங்கி வந்த கணவன் அதிர்ச்சி
₹621 கோடி மதிப்பீட்டில், 3 ஒப்பந்ததாரர்கள் மூலம் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை இடையே உயர்மட்ட மேம்பால பணிகள் தொடங்கியது: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி