முக்கிய செய்தி இந்தியா முன்னாள் பிரதமர் நேரு பிறந்த தினம்: சோனியா காந்தி மலர்வளையம் வைத்து மரியாதை Nov 14, 2021 முன்னாள் நேரு சோனியா காந்தி புதுடெல்லி: முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செய்தார். நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, கடந்த 1889ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி அலகாபாத்தில் (தற்போதைய பிரயாக்ராஜ்) பிறந்தார். குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் என்பதால், நேருவின் பிறந்தநாள் இந்தியாவில் குழந்தைகள் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் நேருவின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் நாடு முழுவதும் அவரது சிலை, உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.மேலும், டெல்லி சாந்திவான் பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‘நேரு நமது தேசத்தின் ஒற்றுமைக்கும், தேசத்தின் பன்முகத்தன்மைக்கும், தேசத்தின் செழுமைக்கும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வழங்கியவர். அவரது ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு தியாகமும் உண்மையான தேசியத்தை எடுத்துக்காட்டுகிறது’ என்று பதிவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!
ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?: துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும் என தகவல்..!!
சென்னை மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்: மெட்ரோ நிர்வாகம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறை; 80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி..பள்ளிக்கல்வித்துறை அசத்தல்..!!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல் குவாரி வெடி விபத்து தொடர்பாக சேமிப்புக் கிடங்கின் உரிமையாளர் கைது
தேர்தலின்போது ‘டீப் பேக்’ வீடியோக்கள் பரப்பப்படுவதை தடுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரிக்கிறது டெல்லி ஐகோர்ட்
வரும் 25 நாட்கள் வெயில் கொளுத்தும்: நாளை மறுநாள் அக்னி நட்சத்திரம் தொடக்கம்.! வானிலை ஆய்வு மையம் தகவல்
ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?… ராகுல் காந்தி சரமாரி கேள்வி
பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்