கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை குறைந்ததால், வார விடுமுறையை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வந்தது. கடந்த 2 தினங்களாக மழை குறைந்ததையடுத்து நேற்று சுற்றுலாப்பயணிகள் வருகை ஓரளவு இருந்தது. மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.