பெங்களூரு: கோவை சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டார். கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு, பள்ளி முதல்வரை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளதாக துணை ஆணையர் ஜெயசந்திரன் கூறியிருந்தார். கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகள், ஆர்.எஸ். புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். 2 மாதங்களுக்கு முன்பு திடீரென வேறு பள்ளியிலும் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அந்த மாணவி வியாழக்கிழமை மாலையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.