டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு இன்று தங்களது ஆய்வை தொடங்கினர். கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையால் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் பாதிப்பு விவரங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.