கோவையில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறிவிட்டு தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

கோவை: கோவையில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்கடம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 17 மாணவி நேற்று மாலை தன்னுடைய வீட்டில் உள்ள அறையில் தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தார்.

இதனை பார்த்த பெற்றோர் மற்றும் அந்த மாணவியை பார்க்க வந்த நண்பர் உள்ளிட்டோர் உக்கடம் போலீசில் புகார் அளித்தனர். மாணவியின் சடலத்தை கைப்பற்றி போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறப்பதற்கு முன்பாக அந்த மாணவி எழுதியதாக கடிதம் ஒன்றையும் போலீசார் கண்டெடுத்தனர். அதில் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் வேறு ஒரு மனைவியின் தந்தை உட்பட 3 பேர்களின் பெயர்களை அந்த மாணவி குறிப்பிட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

இறந்த மாணவி ஆர் எஸ் புறத்திலுள்ள சின்மயா மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். தன்னுடைய மகளுக்கு 6 மாதங்களுக்கு மேலாக ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்து வந்தார் என்பது மாணவியின் பெற்றோரது குற்றச்சாட்டாகும். தன்னுடைய மகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாலியல் பற்றி தெரிந்ததும் அதனை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துவிட்டதாக மாணவியின் தாய் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார்.

தங்கள் மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து மரணத்திற்கு காரணமான ஆசியர் மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார் மாணவியின் வாட்ஸ்அப் உரையாடல்கள், செல்போன் உரையாடல்கள் உள்ளிட்டவை பரிசோதிக்க உள்ளனர்.

அத்துடன் மாணவியின் பெற்றோர், அவருடைய தோழிகள், நண்பர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.                      

Related Stories: