மயிலாப்பூரில் பரிதாபம் பஸ்சுக்கு காத்திருந்தவர் மயங்கி விழுந்து பலி

சென்னை: திருவொற்றியூரை சேர்ந்த மாதவன் (60), மயிலாப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே உள்ள நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென அவர் சாலையிலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அங்கு வந்த மயிலாப்பூர் போலீசார், மாதவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்சாரம் பாய்ந்து அவர் இறந்தாரா அல்லது வேறு காரணமாக என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: