சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மழைநீர் பல இடங்களில் தேங்கி வடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திக்குள்ளாகின்றனர். கடந்த 7ம் தேதி தண்டவாளங்களில் நிறைய இடங்களில் மழைநீர் தேங்கியதையடுத்து மின்சார ரயில் சேவைகள் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. முன்னறிவிப்பின்றி ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளானாகினர்.