டெல்லி: டெல்லியில் யமுனை ஆற்றில் பெருக்கெடுத்துள்ள ரசாயன நுரையை படகுகள் மூலம் அகற்றி மூங்கில் தடுப்புகளை அமைக்க டெல்லி நீர் வாரிய ஊழியர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டுள்ளனர். டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று சாத் பூஜை. சூரியனுக்கு நன்றி கூறும் இவ்விழா 4 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டின் சாத் பூஜை திங்களன்று தொடங்கிய நிலையில், யமுனை நதியில் ரசாயன நுரை பெருக்கெடுத்து மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. சிலர் ரசாயன நுரை பற்றி கவலைப்படாமல் யமுனையில் நீராடி வழிபட்டனர். இந்நிலையில் யமுனை நதியில் பெருக்கெடுத்துள்ள ரசாயன நுரையை அகற்றக்கோரி டெல்லி அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.