புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுவையில் ஞாயிறுக்கிழமை தொடங்கி கனமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஆயிரம் ஏக்கர் அளவில் பயிர்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில், இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏழை தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித வருமானமுமின்றி பாதிக்கப்படுகின்றனர்.