மீனம்பாக்கம்: அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சூட்கேஸ் பீடிங்கிற்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.90.17 லட்சம் மதிப்புடைய 2.06 கிலோ தங்க கம்பிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தஞ்சாவூர் பயணியை கைது செய்தனர். அபுதாபியில் இருந்து எத்தியாடு ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, தஞ்சாவூரை சேர்ந்த 32 வயது ஆண் பயணி, தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே சென்றார்.