கூத்தாநல்லூர் அரசு பெண்கள் பள்ளியில் ரூ.88லட்சத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் ரூ.88.07 லட்சம் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறை கட்டிடம், அறிவியல் ஆய்வக கட்டிடம் மற்றும் நூலக கட் டிடங்கள் புதிதாக கட்டப்பட்டது.இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி யில் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இக்கட்டிடங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதை யொட்டி கூத்தாநல் லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருவாரூர் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் முன்னி லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி குத்துவிளக்கேற்றி மாணவர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: