கொழும்பு: உரப் பற்றாக்குறையால் தவித்த இலங்கைக்கு ‘நானோ’ உரத்தை 2 விமானங்களில் இந்திய அரசு அனுப்பி வைத்ததாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனமான இஃப்கோ, களச் சோதனைகளுக்காக நானோ தொழில்நுட்பம் சார்ந்த உரங்களை குஜராத் மாநிலம் கலோல் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்றும், பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் இஃப்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ரசாயன உர இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவால் இலங்கையில் கடுமையான உரப் பற்றாக்குறை ஏற்பட்டது.