டெல்லி: நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதை கைவிடுவதற்கான ஒப்பந்தத்தில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் ஐநாவின் COP26 மாநாட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த மாநாட்டில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன. அக்டோபர் 31ம் தேதி தொடங்கிய இந்த மாநாடு நவம்பர் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது. காடுகள் அழிப்பு தடுப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதில் இந்தியா கையெழுத்திடவில்லை. இந்நிலையில் நிலக்கரியை கைவிடுவதற்கான மற்றொரு முக்கிய ஒப்பந்தத்தில் போலந்து, வியட்நாம், சிலி போன்ற நிலக்கரி அதிகம் பயன்படுத்தும் 40க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.