விழுப்புரம்: பாலியல் வழக்கில் நீதிபதியின் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு சென்ற இடத்தில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்போதைய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மீதும் வழக்கு பாய்ந்தது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.