சென்னை: அமெரிக்க நீதிமன்றத்தின் கோரிக்கையைடுத்து, பாங்காக் நிறுவனத்தின் ஹெலிகாப்டரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.ஹமீத் இப்ராஹிம் அன்ட் அப்துல்லா மெரிலாக் ஏவியன் சர்வீஸ் என்ற நிறுவனம், பெல் 214 என்ற ஹெலிகாப்டரை மாத வாடகை அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த ஏஏஆர் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து, 2019ல் இந்தியாவிற்கு கொண்டு வந்தது. இந்நிலையில், பண மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள இந்த ஹெலிகாப்டரை இயக்க தடை விதித்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்துமாறு இந்திய அமலாக்கத் துறைக்கு அமெரிக்காவை சேர்ந்த ஹோம்லேண்ட் செக்யூரிட்டி துறை வேண்டுகோள் விடுத்தது.இதையடுத்து, இந்த ஹெலிகாப்டரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தேடி வந்தனர்.