கும்பகோணம்: கும்பகோணம் அருகே நாச்சியார்கோயில் சரகம் கீரனூர் மணவெளி தெருவை சேர்ந்தவர் சங்கர் (55). இவரின் கூரை வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூங்கி கொண்டிருக்கும் போது 11 மணிக்கு திடீரென வீட்டின் கூரைப் பகுதி தீ பற்றி எரிந்தது. இதை அறிந்த சங்கர் வீட்டிற்கு வெளியே வந்து தீயை அணைக்க முயற்சித்த போது வீடு முழுவதும் தீ பற்றி எரிந்தது.