மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ரஜினி பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உடல் நல பாதிப்பால் ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக அறுவைச் சிகிச்சை நிபுணர் அம்லோற்பவநாதன் கூறியுள்ளார்.

Related Stories: