புதுச்சேரி: தீபத் திருநாளாம் தீபாவளி இந்தாண்டு நவம்பர் 4ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளன. 31ம்தேதி ஞாயிறு, 1ம்தேதி புதுச்சேரி விடுதலை நாள் ஏற்கனவே அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நவ. 2ம்தேதி இறந்த ஆன்மாக்களின் நினைவுநாள், 3ம்தேதி தீபாவளிக்கு முந்தைய நாள் என்ற அடிப்படையில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி நேற்று உத்தரவிட்டுள்ளார்.