மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி அட்மிட்

சென்னை: எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,  எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்கம் பிரச்னை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் இதுதொடர்பான பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனை முடிந்த பின்னர் இன்று அவர் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.

Related Stories: