வேலைவாய்ப்பு பயிற்சி துறை முதல்வர் பதவிக்கு 7ம் தேதி எழுத்து தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையில் அடங்கிய முதல்வர், தொழிற்பயிற்சி நிறுவனம் பயிற்சி உதவி இயக்குநர் பதவிகளுக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு (கொள்குறி வகை) வருகிற 7ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் 15 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (ஹால்டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

Related Stories: