தடங்கல் இன்றி தீபாவளி பஸ்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: போக்கு வரத்து துறை வெளியிட்டசெய்திக்குறிப்பு: புதிய டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்களின் தற்போதைய இருப்பு நிலை, போக்குவரத்துக் கழகங்கள் அனைத்து பேருந்துகளையும் இயக்க  தேவையான டயர் ஃப்ளோட்டை விட அதிகமாக இருப்பதால் தடையின்றி பேருந்துகளை இயக்க முடியும். 15,997 புதிய டயர்கள்  மே-2021 முதல் தற்போது வரை வாங்கப்பட்டுள்ளது. மேலும் 1,000 டயர்கள் போக்குவரத்துக் கழகங்களுக்கு இந்த வாரம் சென்றடையும்  நிலையில் உள்ளது. இதனால், தற்போதைய  நிலையில், எந்த தடங்கலும் இல்லாமல் தீபாவளி சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் ஏதுவான நிலையில் இருப்பதை இது காட்டுகிறது.

பழைய டயர்களை ரீட்ரெடிங் செய்ய டிரெட் ரப்பர், பிணைப்பு கோந்து, பிவிசி ஆகியவை போதுமான அளவு இருப்பில் உள்ளன. அரசு போக்குவரத்துக் கழகங்களிடம் அனைத்து பேருந்துகளையும் முழுமையாக  இயக்க தேவையான டயர்கள் மற்றும் ரீட்ரெடிங் பொருட்கள் போதுமான அளவிற்கு  இருப்பதால்,  தற்போதும் மற்றும் தீபாவளி பண்டிகையின் போதும்  அனைத்து தடப் பேருந்துகள்  மற்றும்  சிறப்பு பேருந்துகளை   சீராக இயக்க முடியும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: