டி.ஆர்.பாலு எம்பி கோரிக்கையை ஏற்று புற்றுநோய் சிகிச்சைக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதி ரூ.3 லட்சம்

சென்னை: திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு கோரிக்கையை ஏற்று புற்றுநோய் சிகிச்சைக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டது. திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் திமுக தலைவருமான டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை சேர்ந்த தாமரைக்கனி என்பவரது புற்றுநோய் சிகிச்சைக்காக, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யும்படி கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். எம்பி டி.ஆர்.பாலுவின் பரிந்துரையினையும், வேண்டுகோளையும் ஏற்று பிரதமர் மோடி, தாமரைக்கனியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.3 லட்சம்  நிதியுதவி வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம், டி.ஆர்.பாலுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தாமரைக்கனி என்பவரது புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.3 லட்சம்வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வழங்கப்படும். சிகிச்சை முடிந்த பின்னர், உரிய ஆவணங்களின் நகலை, பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆவணங்கள் கிடைத்த பின்னர், உதவித் தொகை உடனடியாக மேற்குறிப்பிட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: