சென்னை: திமுக பொருளாளரும், எம்பியுமான டி.ஆர்.பாலு கோரிக்கையை ஏற்று புற்றுநோய் சிகிச்சைக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்பட்டது. திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் திமுக தலைவருமான டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை சேர்ந்த தாமரைக்கனி என்பவரது புற்றுநோய் சிகிச்சைக்காக, பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவி செய்யும்படி கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். எம்பி டி.ஆர்.பாலுவின் பரிந்துரையினையும், வேண்டுகோளையும் ஏற்று பிரதமர் மோடி, தாமரைக்கனியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.