சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,22,700 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,112 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,96,328 ஆக உள்ளது. இதேபோல், நேற்று சிகிச்சை பெற்று வந்த 1,341 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,47,504 ஆக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 5 பேரும், அரசு மருத்துவமனையில் 9 பேர் என 14 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 36,033 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் நேற்று 144 பேர், கோவையில் 130 பேர் என 2 மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.